சென்னையில் மழையில் தவிக்கும் மக்களுக்கு உதவ காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் மழையில் தவிக்கும் மக்களுக்கு உதவ காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும், மழையினாலும், வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.