ராகுல் காந்தியை சட்டத்தின் பெயரால் முடக்க நினைத்தால்...ஒருபோதும் நடக்காது - ஈ.வி.கே.எஸ்!

ராகுல் காந்தியை சட்டத்தின் பெயரால் முடக்க நினைத்தால்...ஒருபோதும் நடக்காது - ஈ.வி.கே.எஸ்!

ராகுல் காந்தியை சட்டத்தின் பெயரால் முடக்கி விடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், உடல்நிலை குறைவு காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு சட்டப்பேரவைக்கு  வருகை தந்தார். அவருக்கு  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ருபி மனோகரன் உள்ளிட்ட பலர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். 

இதையும் படிக்க : வேங்கைவயல் தீண்டாமை விவகாரம் : 1 பெண், 2 ஆண்... வெளியான அதிர்ச்சி தகவல்...!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்றைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவதாக சொன்னார்கள்; ஆகவே அவருடைய உரையை கேட்பதற்காக சட்டமன்றத்திற்கு வருகை புரிந்ததாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்தியை சட்டத்தின் பெயரால் முடக்கி விடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என தெரிவித்தார். மேலும், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெரும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனவும் கூறினார்.