2 கார்கள் போட்டி போட்டு ரேஸ்.. பதறி போன ஆம்புலன்ஸ் டிரைவர்.. வீட்டில் சொருகியதால் 2 பேர் காயம்!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே 108 ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.

2 கார்கள் போட்டி போட்டு ரேஸ்.. பதறி போன ஆம்புலன்ஸ் டிரைவர்.. வீட்டில் சொருகியதால் 2 பேர் காயம்!!

தொட்டியம் முள்ளிப்பாடி பகுதியில் தகராறில் காயமடைந்த நபரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சீனிவாசநல்லூர் அருகே வந்த போது எதிரே இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முயற்சித்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியைடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காரின் மீது மோதாமல் தடுக்க வாகனத்தை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து ராஜா என்பவரது வீட்டின் மீது மோதியுள்ளது. இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிவகுமார், டெக்னீசியன் குருநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.