வேளாண்மைத்துறை அமைச்சருக்கு அடுக்கான பதிலை வழங்கிய ஆர்.பி. உதயகுமார்...!!!

வேளாண்மைத்துறை அமைச்சருக்கு அடுக்கான பதிலை வழங்கிய ஆர்.பி. உதயகுமார்...!!!

பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்ட வேளாண்மைத்துறை அமைச்சருக்கு அடுக்கான பதிலை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேரவையில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஆர்.பி. உதயகுமார் கேள்வி:

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். 

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்:

அதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் கல்லூரிகளில் 700 க்கும் மேற்பட்ட இடங்கள் ஏற்கனவே காலியிடமாக இருப்பதாக புதிய கல்லூரி அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எனப் பதிலளித்தார்.  மேலும் பத்து ஆண்டுகளாக ஆர்.பி.உதயகுமார் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றியதையும் சுட்டிக்காட்டி பேசினார். 

பத்து ஆண்டுகளாக ..:

அவரைத் தொடர்ந்து பேசிய ஆர்.பி. உதயகுமார், கேள்வி கேட்கும் போதெல்லாம் பத்து ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புவது வழக்கமாக இருப்பதாகவும் பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறிய அவர் மதுரை திருமங்கலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய பேருந்துநிலையம், துணைக்கோள் நகரம், புதிய கட்டடங்கள் என அதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டதால் பேரவையில் இருந்த அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

இதையும் படிக்க:  ஆருத்ராவை போல் ரூ. 6000 கோடிக்கு மேல் மோசடி செய்த ஐஎஃப்எஸ், ஹிஜாவூ!!!