புதுக்கோட்டை சாதி ஏற்றத்தாழ்வுகள் - சாதி கொடுமைகள் வேரறுக்க வேண்டும்

புதுக்கோட்டை சாதி ஏற்றத்தாழ்வுகள் -  சாதி கொடுமைகள் வேரறுக்க  வேண்டும்

கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்திற்கு வந்திருந்த   மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது  

பொங்கல் விழா கொண்டாடுகின்ற நேரத்தில் தமிழகத்தில் நிலவுகின்ற சாதி ஏற்றத்தாழ்வுகளை குறிப்பாக பட்டியல் இன மக்கள் மீது இழைக்கப்படுகின்றன சாதி கொடுமைகளை வேரறுக்க வேண்டும் என்று நாம் உறுதி ஏற்க வேண்டும் எனவும்

 புதுக்கோட்டையில் நடந்திருக்கின்ற சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பெருத்த அவமானம் அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய சூழ்நிலையில் தமிழக முதல்வர் விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார் அது வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல் அதனை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் 

 விசாரணை மேற்கொண்டு இருக்கின்ற காவல்துறையினர் மீதும் விசாரணையின் மீதும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படு கின்றன தலித் மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு அங்கு குடிநீர் தொட்டில் மலம் கலக்கப்பட்டதோ அந்த தலித் மக்களையே குற்றவாளியாக ஆக்குகின்ற   முறையை யில் அந்த விசாரணை நடைபெறுவதாக செய்தி வருகிறது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் படிக்க | மகப்பேறு சலுகைகளை வழங்க மறுக்க முடியாது - உயர்நீதி மன்றம்

முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்  உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கக்கூடிய நோக்கத்தோடு  விசாரணை நடைபெற கூடாது தமிழக முதல்வர் தேவையானால் அந்த விசாரணைக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அதிகாரிகளை மாற்றி உண்மையான விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

மேலும் படிக்க | பொங்கல் பண்டிகைக்கு பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பு - சங்கர் ஜிவால்

வேப்பூர் மற்றும் திட்டக்குடி பகுதியில் முறையான பயிற்சி பெறாமல் மருத்துவ பட்டம் பெறாதவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபடுவதாகவும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு பணியில் ஈடுபடுவதாகும் அப்படிப்பட்ட மருத்துவர்கள் இங்கு செயல்படுகின்றனர் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் சட்டவிரோதமாக கரு கலைப்பு  செய்யும்  நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வேப்பூர் பகுதியில் பனைமரம் வெட்டியவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று  பேசினார்