ஊரடங்கை மீறி கோவில் திருவிழாவில் பங்கேற்ற 450 பேர் மீது வழக்குப்பதிவு...

களக்காடு அருகே ஊரடங்கை மீறி கோவில் திருவிழாவில் பங்கேற்ற 450 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஊரடங்கை மீறி கோவில் திருவிழாவில் பங்கேற்ற 450 பேர் மீது வழக்குப்பதிவு...

நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்த சிதம்பரம் கிராமத்தில் பழமை வாய்ந்த நாராயணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில், ஆற்றங்கரையில் நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டை ஆடிய நிகழச்சியில் ஊரடங்கை மீறி ஏராளமான பொதுமக்கள் முகக்கவசம் கூட அணியாமல் பங்கேற்றனர். அப்போது பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதையடுத்து ஊரடங்கை மீறி கோவில் திருவிழாவில் பங்கேற்ற 450 பேர் மீது களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.