தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி...

தமிழக பாஜக எம்எல்ஏ-க்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்கால  முயற்சிகளுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி...

தமிழக பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போதுபாஜக மாநிலத் தலைவர் எல். முருகனும் சந்திப்பின்போது உடனிருந்தார்.

 இந்த சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழகத்தில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோருடன் கலந்துரையாடினேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை அவர்கள் பகிர்ந்தனர். வரும் காலத்தில் அவர்களது பெரு முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.