தொடரும் வரதட்சணை கொடுமை... கர்ப்பிணி பெண் தீக்குளித்து இறப்பு... கணவர், மாமனாரை கைது செய்தது போலீஸ்...

தஞ்சாவூரில் வரதட்சணை கொடுமையால், பெண் தீக்குளித்த தற்கொலை கணவர், மாமனாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடரும் வரதட்சணை கொடுமை... கர்ப்பிணி பெண் தீக்குளித்து இறப்பு... கணவர், மாமனாரை கைது செய்தது போலீஸ்...

தஞ்சாவூர் மேலவஸ்தாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார்,35,. இவருக்கும் உதயா,32. என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் தரணிதரன் என்ற மகன் உள்ளார். திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார். 

இதையடுத்து முத்துக்குமார் தம்பி நந்தகுமார், தந்தை மனோகர், 60, தாய் ராஜலெட்சுமி ஆகிய மூவரும் சேர்ந்து, உதயாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இதனால், உதயா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.  இதன் பின்னர் உதயாவின் தந்தை சந்திரசேகர், தனது மகளை மீண்டும் முத்துக்குமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.   மீண்டும் உதயாவை துன்புறுத்திய வண்ணமே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், உதயாவின் கணவரான முத்துக்குமார் வெளிநாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் திரும்பிய நிலையில், மீண்டும் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார்.

இதில் 7 மாதம் கர்ப்பிணியான இருந்த உதயாவை மீண்டும் கணவர் முத்துக்குமார், அவரது குடும்பத்தினர், சேர்ந்து துன்புறுத்தியுள்ளனர்.  இதில், கடந்த 9ம் தேதி உதயா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது, சந்திரசேகரின் உறவினர்கள் சிலர் அவருக்குத் தகவல் அளித்தனர். அங்கு வந்து பார்த்த போது, மகளின் உடலில் தீக்காயங்கள் அதிகளவில் இருப்பதாகவும், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, தமிழ்பல்கலைகழக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவர் முத்துக்குமார், அவரது தந்தை மனோகர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.