நிபா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

நிபா வைரஸ் குறித்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

நிபா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

கேரளாவில் நிபா வைரஸ் பரவலையொட்டி தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளிட்டுள்ளது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.

கேரளா பகுதியை ஒட்டிய கன்னியாகுமரி , தென்காசி , தேனி, நீலகிரி,  கோவை , மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் எல்லைப் பகுதிகளை கடுமையாக கண்காணிக்க சுகாதாரத் துறை உத்தரவு.

அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

பரிசோதனை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத் துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும். ரத்தம் ,  தொண்டை சளி   மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும்

நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து பொதுவான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்காணித்து உடனுக்குடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.