மின்தடைக்கு காரணம்...விளக்கமளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

மின்தடைக்கு காரணம்...விளக்கமளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி இன்று மாலைக்குள் சீரமைக்கப்பட்டு மின்விநியோகம் சீராகும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். 


சென்னை பட்டினப்பாக்கம் துணைமின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி திடீரென பழுதான நிலையில், அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து அங்கு சென்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். 

இதையும் படிக்க : மணிப்பூர் கலவரம் - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மின் அழுத்தம் காரணமாகவே பல இடங்களில் மின்சார தடை என்பது ஏற்பட்டுள்ளதாக கூறியவர், இன்று மாலைக்குள் சீரமைக்கப்பட்டு மின்விநியோகம் சீராகும் என அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்த பிறகு மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் எந்தவித சமரசமும் செய்யவில்லை எனவும், தரமான பொருட்கள் மட்டுமே வாங்கப்படுவதாகவும் கூறினார்.