ஏற்காட்டிற்கு தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தும் காவல்துறை...

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணிகளை அடிவாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

ஏற்காட்டிற்கு தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தும் காவல்துறை...
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே சுற்றுலாதலமான ஏற்காட்டில் கடந்த இரண்டு வாரங்களாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் வந்த சுற்றுலா பயணிகள், கூட்டம் கூட்டமாக குவிந்தனர் .
இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வர முற்றிலும் தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இந்த தடையை மீறி  ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளை அடிவாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஏற்காட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பணி நிமித்தமாக செல்பவர்களை ஆவணங்களை பரிசோதித்த பின்னர் காவல்துறையினர் அனுமதித்தனர்.