தேவதானப்பட்டி அருகேயுள்ள புல்லக்கா பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக பெரியகுளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே அவர்களின் வழிகாட்டுதலின் படி தேவதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி ரவி என்பவரது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1800 (750 மில்லி அளவுடையவை) வெளி மாநில மதுபாட்டில்களை கண்டுபிடித்தனர்.