ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய வாலிபரை கைது செய்த போலீஸ்....!!

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசாரை, வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கிய வாலிபரை கைது செய்த போலீஸ்....!!

மாதவரம் எல்லைக்குட்பட்ட  குமரன் நகர் அருகே ரோந்து வாகனத்தில் வெற்றிவேல் , ஆரிப்   என்ற  காவலர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கொளத்தூர் வெங்கடசாய் நகரை சேர்ந்த ஜான் பிரான்சிஸ  என்பவர், இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்திருந்தார்.

அவரை மடக்கி வாகனத்தின் உரிமை ஆவணங்களை போலீசார் கேட்டுள்ளனர். அப்போது அவர் தீடீரென வாகனத்தை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். போலீசாரும் அவரை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர். ஒரு கட்டத்தில் பிடிக்க முயன்றபோது வெற்றிவேல் என்ற காவலரை, அந்த நபர் தாக்கியுள்ளார். அந்தசமயம் மற்றொரு காவலர் அவரை மடக்கி பிடித்தார்.

முகத்தில் காயமடைந்த வெற்றிவேல் என்ற காவலர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீஸார், கைது செய்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சி்றையில் அடைத்தனர்.