தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இன்ப அதிர்ச்சியளித்த முதலமைச்சர்...

ஒசூரில் தமிழக முதல்வரின் முகக்கவசத்தை கழற்ற சொல்லி மகிழ்ந்த பெண்ணிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வழியே பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இன்ப அதிர்ச்சியளித்த முதலமைச்சர்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மக்களை தேடி மருத்துவம் என்னும் நிகழ்ச்சியை தொடக்கி வைக்க ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்றிருந்தார். அப்போது முதல்வரின் வாகனம் வரும் போது ரம்யா என்ற பெண், முதல்வரின் முகக்கவசத்தை கழற்றி முகத்தை காட்ட அன்புடன் கேட்டார். 

உடனே, முகக்கவசத்தை கழற்றி முகத்தை காட்டினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரம்யா மற்றும் குடும்பத்தாருடன் முதல்வர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.