பனை மரங்களை வெட்ட இவரின் அனுமதி பெறுவது கட்டாயம்!

பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பனை மரங்களை வெட்ட இவரின் அனுமதி பெறுவது கட்டாயம்!

பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பனை உற்பத்தியை பெருக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 3 கோடி ரூபாய் செலவில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்னையில் பாதிப்பை ஏற்படுத்திடும் வெள்ளை ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.