”ஆவின் பால் விவகாரத்தில் அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" - ஜெயக்குமார்

ஆவின் பால் விவகாரத்தில் விரைவில் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு தினத்தை ஒட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சியில் அதிக பேருந்துகள் வாங்கியிருந்தால், குடியாத்தத்தில் மாணவனுக்கு விபத்து நிகழ்ந்திருக்காது என குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க : "புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை" - சுபாஷ் சார்கர்

தொடர்ந்து பேசியவர், ஆவின் பால் விவகாரத்தில் விரைவில் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என ஜெயக்குமார் கூறினார்.