தடுப்பூசி: இரண்டாம் தவணை செலுத்த முடியாமல் மக்கள் அவதி!

மதுரை மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாததால் 2ம் தவணை செலுத்த முடியாமல்  பொதுமக்கள் ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.

தடுப்பூசி: இரண்டாம் தவணை செலுத்த முடியாமல் மக்கள் அவதி!

மதுரை மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாததால் 2ம் தவணை செலுத்த முடியாமல்  பொதுமக்கள் ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், மதுரையில் இதுவரை 8 லட்சத்து 79 ஆயிரத்து 442 பேர் செலுத்தி கொண்டுள்ளனர், கோவிஷீல்டு முதல் தவணை 6 லட்சத்து 44 ஆயிரத்து 944 பேரும், 2ம் தவணையை 1 லட்சத்து 35 ஆயிரத்து 813 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர், அதேபோல் கோவாக்சின் முதல் தவணை 56,275 பேரும், 2ம் தவணையை 42,410 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில்  இன்று கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாததால் 2ம் தவணை செலுத்தி கொள்ள முடியாமல் முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரும்பாலான மையங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.