மெட்ரோ ரயில் வளாகம், ரயிலில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் ரத்து...

மெட்ரோ ரயில் வளாகத்திலும், ரயிலிலும் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

மெட்ரோ ரயில் வளாகம், ரயிலில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் ரத்து...

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெட்ரோ ரயில் நிறுவனம் முறையான அனுமதி இல்லாமல் அபராதம் வசூலிப்பதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெட்ரோ ரயில் சட்டப்படியே இந்த அபராதம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பொது நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தாலும், சட்ட அதிகாரம் பெறாததால் இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.