”பயணிகளிடம் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும்...” - போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

”பயணிகளிடம் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும்...” - போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க பல்வேறு அறிவுரைகளை வழங்கி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கால அட்டவணையின் படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும்; அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல வலியுறுத்தல், நிர்ணயிக்கப்பட்ட சரியான பயண கட்டணங்களை பயணிகளிடம் உரிய பயண சீட்டு அளித்து வசூலிக்க வேண்டும் என் பல அறிவுரைகளை போக்குவரத்துத்துறை வழங்கியுள்ளது. 

மேலும், பேருந்துகளில் உள்ள பழுதுகளை முறையாக சரி செய்து வழித்தடத்தில் கால அட்டவணையின் படி பேருந்துகளை முறையாக இயக்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பேருந்தினை மிக கவனத்துடன் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இயக்க வேண்டும், பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி இயக்குவதன் மூலம் பயண சீட்டு வருவாய் மற்றும் இதர வருவாய் என பெருக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க : பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆர்ட்டெமிஸ்!!!