தேர்தலில்  திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு...

சட்டமன்ற தேர்தலில்  திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தலில்  திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு...

சேலம் மாவட்ட ஓமலூரில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு மீது பல்வேறு  விமர்சனங்களை தெரிவித்தார். குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்  என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆயிற்று என்றும் எடப்பாடி பழனிச்சாமி வினவினார். மேலும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் தில்லுமுல்லு செய்து வெற்றிபெற முயற்சிப்பார்கள்  என்றும் அனைவரும் விழிப்போடு இருந்து அதனை முறியடிக்க வேண்டும்  எனவும் கேட்டு கொண்டார். முன்னதாக முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.