தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..?  பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு...

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..?  பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று தணிந்துள்ளது. தொற்று பரவல் குறைந்துள்ளதால், குஜராத், மத்திய பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி,  கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 
 
இதனால், தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நேற்று அறிவிப்பு வெளியாகலாம் என  எதிர்பார்க்கப்பட்டது.   9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பரிசீலனை நடப்பதாக பள்ளிக்கல்வி  அமைச்சர் அன்பில்  மகேஷ் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க  அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் எனவும்  ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன.