மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் திறப்பு...துவங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு!

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் திறப்பு...துவங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். 

தென்மேற்கு பருவமழையை ஒட்டி சென்னையில் 200 இடங்களில்  சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக கொளத்தூரில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ முதலுதவி பொருட்களை வழங்கினார். 

இதையும் படிக்க : 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி...!

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடப்பாண்டின் தொடக்கத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பருக்கு முன்பாக முடிக்கப்படும் என தெரிவித்தார்.