மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன் விளக்கம்

மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனைக்காக   இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது:  மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர்மா.சுப்பிரமணியன், 1264 கோடி ரூபாய் செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ கல்லூரி கட்டும் பணி 2016 ஆம்  தொடங்கப்பட்டதாகவும் 6 ஆண்டு காலமாக சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். எய்ம்ஸ் கட்டுமான பணியை விரைந்து  தொடங்க  பிரதமர் மோடிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறிய அமைச்சர், நாளை முதல் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அளவுக்கு, தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் திமுக சாதி, மத பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது என்று ஒன்றிய அரசு ஆராய வேண்டும் என வலியுறுத்தினார்.