கைரேகை பதிவால் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நூறுநாள் வேலை பணியாளர்கள்!!

கைரேகை பதிவால் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நூறுநாள் வேலை பணியாளர்கள்!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அருகாவூரில் நூறு நாள் பணியாளர்கள் கைரேகையால் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அருகாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட நூறு நாள் பணியாளர்கள் சுமார் 200 பேருக்கு மேல் பணிக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வந்து ஆன்லைன் மூலம் கைரேகைகளை பதிவிட வேண்டியுள்ளது.

இதனால் வேலையை தொடங்க கால தாமதம் ஏற்படுவதாகக் கூறியும், பழைய வருகை பதிவு முறையை அமல்படுத்த வலியுறுத்தியும்  செய்யாறு- ஆரணி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு போராட்டத்தை கைவிட்டனர்.