"ஒரு துளி நீர் அதிக விளைச்சல்" திட்டம்-எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?
("Per Drop More Crop ") ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் திட்டம் ரூ.960 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் முதல் தவணை மானியம் வழங்க ரூ.261 கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு .
2015 இல் தொடங்கப்பட்ட ‘பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா (PMKSY)’, ஒரே குடையின் கீழ் நீர்ப்பாசனம், நுண்ணீர் பாசனம், கட்டளை பகுதி மேம்பாடு மற்றும் நீர்நிலை மேம்பாடு தொடர்பான பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தது.இந்த திட்டம் விவசாய நீர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஒரு படியாகும். இதன் கீழ், 2017-18 வரை சுமார் 20 லட்சம் ஹெக்டேர் நிலம் நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நபார்டு மற்றும் PMKSY ஆகியவற்றின் கீழ், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் மைக்ரோ பாசன நிதி (MIF) 2018 மே மாதம் அமைக்கப்பட்டது.'ஒரு சொட்டுக்கு அதிக பயிர்' - இது நிலையான மற்றும் வறட்சி-ஆதார விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானது என்று விவரிக்கப்படலாம். இந்த திட்டங்களில் PMKSY பல நாடு முழுவதும் பல்வேறு வெற்றி விகிதங்களுடன் சுமார் 15 ஆண்டுகளாக உள்ளன.
சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தண்ணீரை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பிரதம மந்திரி கிருஷி சின்சாயி திட்டத்தின் கீழ் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.960 கோடி நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான திட்டமான சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளுக்கு முதல் தவணை மானியம் வழங்க ரூ.261 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் பாய்ச்சும் கருவிகளை வாங்க சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு 100 % மானியம் வழங்குகிறது.
மாநில அரசு சார்பில் ரூ.641 கோடி, மத்திய அரசு சார்பில் ரூ.319 கோடி மொத்தமாக ரூ.960 கோடி ஒதுக்க நிர்வாக அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.அதோடு, சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு முதல் தவணை மானியம் வழங்க மாநில அரசு சார்பில் ரூ.181 கோடி, மத்திய அரசு சார்பில் 80 கோடி என 261 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.