தஞ்சாவூர் பெரியகோவில் அன்னாபிஷேகம்... 750 கிலோ அன்னம், 650 கிலோ காய்கறிகள் அபிஷேகம்...

தஞ்சாவூர் பெரியகோவிலில் அன்னாபிஷேகத்தையொட்டி, பெருவுடையாருக்கு 750 கிலோ அன்னம், 650 கிலோ காய்கறிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் பெரியகோவில் அன்னாபிஷேகம்... 750 கிலோ அன்னம், 650 கிலோ காய்கறிகள் அபிஷேகம்...

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீபெருவுடையார் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில் சுமார் 750 கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய்  உள்ளிட்ட 650 கிலோ காய்கறிகள் கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது.

பின் அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதுடன், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.