தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று துக்க நாள் - முதலமைச்சர் பதிவு

தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று துக்க நாள் - முதலமைச்சர் பதிவு


முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:

ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும். இன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிகள் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன. 

விபத்து குறித்த தகவல்களைப் பெற 1070, 94458 69843, 94458 69848 (வாட்சாப்) ஆகிய உதவி எண்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

 மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: மத்திய அரசு 9 ஆண்டுகள் நிகழ்ச்சிகள் ரத்து - அண்ணாமலை

மாண்புமிகு அமைச்சர்கள் திரு. @Udhaystalin திரு. @sivasankar1ss
 மற்றும் உயர் அலுவலர்கள் உடனடியாக ஒடிசா சென்று, அங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலையை அறிந்து, மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த உள்ளனர்.