நிலங்களை கையகப்படுத்துவதற்கு அதிகாரிகள் தேவை... அறிவிப்பை வெளியிட்ட ஓஎன்ஜிசி நிறுவனம்...

நிலங்களை கையகப்படுத்துவதற்கு அதிகாரிகளை தேர்வு செய்யும் ஓஎன்ஜிசி நிறுவனம்.

நிலங்களை கையகப்படுத்துவதற்கு அதிகாரிகள் தேவை... அறிவிப்பை வெளியிட்ட ஓஎன்ஜிசி நிறுவனம்...
காரைக்கால் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் நிலங்களை கையகப்படுத்த ஏதுவாக ஓய்வுபெற்ற நில அளவையர், ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரை தேர்வு செய்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்.
 
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக அரியலூர், கடலூரில் எண்ணெய்க் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரிய ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், நிலங்களை கையகப்படுத்துகிறது ஓஎன்ஜிசி.
 
நிலங்களை கையகப்படுத்த ஏதுவாக திறமை வாய்ந்த அதிகாரிகள் 8 பேரை கூடுதலாக தேர்வு செய்ய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது ஓஎன்ஜிசி நிறுவனம்.