மீசை குறித்து பேச அருகதை இல்லை..... ஜெயலலிதா பாணியில்!!!

மீசை குறித்து பேச அருகதை இல்லை..... ஜெயலலிதா பாணியில்!!!

சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிசாமி, மீசை குறித்து பேசுவதற்கு அருகதை இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா பாணியில்..:

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். ஈரோடு கணபதிநகரில் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில், செய்வீர்களா?, நிச்சியம் வெற்றி பெறச் செய்வீர்களா? என பிரசாரம் செய்தார். 

மீசை குறித்து..:

அதனை தொடர்ந்து பேசிய அவர், ஈ.வி. கே.எஸ் இளங்கோவனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை குறித்து பேசிய உதயநிதி, அண்ணாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் அவர் உண்மையாக இருக்கவில்லை என்றும், சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிசாமி மீசை குறித்து பேச அருகதை இல்லை எனவும் தலைமை செயலகத்தில் சிபிஜ சோதனை நடத்தியபோது, தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நடத்திய போதும் அந்த மீசை என்ன செய்தது எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிக்க:    நாக் அவுட்டான ஓபிஎஸ்.... ஆட்டக்களத்தில் இனி இல்லை!!!