கிரேன் அறுந்து விழுந்து வட மாநில தொழிலாளி பலி: உரிய இழப்பீடு வழங்க கோரி வாகனங்களை அடித்து நொறுக்கிய சக ஊழியர்கள்...

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை கிரேன் அறுந்து விழுந்து வடமாநில தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.உரிய இழப்பீடு வழங்க கோரி 5 வாகனங்களை சக தொழிலாளர்கள் அடித்து நொறுக்கி, காவலர்களை தாக்கியதால் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிரேன் அறுந்து விழுந்து வட மாநில தொழிலாளி பலி: உரிய இழப்பீடு வழங்க கோரி  வாகனங்களை அடித்து நொறுக்கிய சக ஊழியர்கள்...

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஃகு தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இங்கு வடாமநிலத்தை சேர்ந்த 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை அனைவரும் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர். அப்போது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான அஜ்மல் மாலிக் என்பவரின் தலையில் கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப சென்றனர். காவல்துறையினரை வழிமறித்து இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே உடலை எடுக்க்க விடுவோம் என கூறி வாக்குவாதத்தில்  ஈடுப்பட்டனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்களை சூறையாடி காவல்துறையினர் மீதும் வட மாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 காவலர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து மூன்று மணி நேரம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அனைவரும் கலைந்து சென்றனர்.