பாம்பன் தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பன் தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on
Updated on
1 min read

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதி காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது..

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com