தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக தமிழகத்தில், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, விரைவில் அந்த  கொள்கை வெளியிடப்படும்  என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் 'தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ நிராகரிப்போம்' என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது.  

இதில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்  மகாராஷ்டிரா வீட்டு வாரியத் துறை  அமைச்சர் ஜிதேந்திரா அவாத் , கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு , கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, புதிய கொள்கைக்கு பதிலாக தமிழகத்தில் ஒரு கல்விக் கொள்கை உருவாக்கம் வேண்டும் என்பதற்காக கல்வியாளர்களை கொண்டு ஒரு குழுவினை அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.