யார் இந்த சி.வி.தீபக்? சென்னை விமான நிலையத்திற்கு புதிய இயக்குநராக நியமனம்...!

யார் இந்த சி.வி.தீபக்? சென்னை விமான நிலையத்திற்கு புதிய இயக்குநராக நியமனம்...!

சென்னை விமான நிலைய புதிய இயக்குநராக சி.வி.தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். 


சென்னை விமான நிலையத்தில் இயக்குனராக இருந்த சரத்குமார் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் திடீரென டெல்லி தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின்பு உடனடியாக, அந்த பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. பிறகு, சென்னை விமான நிலையத்தில் பொது மேலாளராக இருந்த எஸ்.எஸ். ராஜுவுக்கு கூடுதல் பொறுப்பாக விமான நிலைய இயக்குனர் பதவி வழங்கப்பட்டது. 

இதையும் படிக்க : நெல்லையில் ருசீகர சம்பவம்...தங்களது பள்ளிக்காக மாணவர் சேர்க்கையில் களமிறங்கிய முன்னாள் மாணவர்கள்!

இந்த சூழலில், தற்போது விமான நிலையத்தின் புதிய இயக்குநராக சி.வி.தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் துணை பொது மேலாளர் பொறுப்பில் இருந்த தீபக், பதவி உயர்வு பெற்று டெல்லி தலைமையகத்தில் நிதித்துறை பொது மேலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது, சென்னை விமான நிலையத்தின் புதிய இயக்குனராக சி.வி.தீபக் நியமிக்கப்பட்டுள்ளார்.