நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு N-95 முகக்கவசம் - தேசிய தேர்வு முகமை

நாளை நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிதாக N95 முகக்கவசம் வழங்கப்படும் என்றும், அந்த முக கவசத்தை அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு N-95 முகக்கவசம் - தேசிய தேர்வு முகமை

நாளை நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன்படி தேர்வு மையங்களில் புதிதாக N95 முகக்கவசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட், 50 மில்லி சானிடைசர் பாட்டில், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை தேர்வறைக்குள் கொண்டு செல்ல மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ள தேசிய தேர்வு முகமை,

ஹால் டிக்கெட்டின் முதல் பக்கத்தில் கொரோனா குறித்த சில விவரங்களை பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

குறிப்பாக தேர்வுக்கு முந்தைய 14 நாட்களில் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இருந்ததா? நோய் அறிகுறி இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தீர்களா? என்பது உள்பட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் மையத்திற்கு பிற்பகல் 1 மணியில் இருந்து செல்லலாம் என்றும், 1.30 மணிக்குள் சென்று விட வேண்டும் எனவும், அதன்பிறகு செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.