கண்டிப்பாக 100% ஆதார் எண் இணைக்க வேண்டும்...!

கண்டிப்பாக 100% ஆதார் எண் இணைக்க வேண்டும்...!

மின் இணைப்புடன் நூறு சதவிகிதம் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மின்வாரிய துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சந்தேகம் இருந்தால் மின்துறையை அணுகலாம்: 

கோவை, பீளமேடு பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அதிமுக, மற்றும் பாஜகவினர் வதந்தி பரப்பியதாக குற்றஞ்சாட்டினார். மின் கட்டண விவகாரத்தில் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறையை அணுகலாம் என்று கூறிய அவர், ஆதார் எண் இல்லை என்றாலும் கட்டணம் செலுத்தலாம் எனவும், மின் இணைப்பு பெற்றவர்கள் நூறு சதவிகிதம் கண்டிப்பாக ஆதார் எண்ணை கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: சிசிடிவியில் உள்ளது நான் இல்லை..! சுவாதி கண்ணீர் மல்க வாக்குமூலம்..!

தொடர்ந்து பேசிய அவர், மின் இணைப்பு பெற்ற நபர் இறந்து இருக்கும் பட்சத்தில் அதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறினார். மேலும் மின்சார துறையை சீர்திருத்தம் செய்யும் பொருட்டு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்வாரியத்தை புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும் என தெரிவித்தார்.