போலி மின்னஞ்சல் தயாரித்து பண மோசடி... ஐ.ஐ.டி. மாணவர் மீது புகார்...
தெரிந்தவர்களின் பெயரில் போலி மின்னஞ்சல் தயாரித்து அதன் மூலம் கிப்ட் கூப்பனாக 25 ஆயிரம் ரூபாய் வரை பெற்ற மோசடி நபர் மீது ஐ.ஐ.டி மாணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில்
அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்க
செங்கல்பட்டு அடுத்த
இதன்மூலம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய மனு குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம் பகுதியை சேர்ந்த ஏ.எஸ்.சண்முகராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை காண சென்றபோது, 40 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அந்த மைதானத்தில் இலவசமா சுத்தமான குடிநீர் வசதியோ, கழிப்பறைகளோ அமைக்கப்படவில்லை என்றும், குடிநீர் 100 மில்லி லிட்டர் 10 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாட்டில் 100 ரூபாய்க்கும், குளிர் பானங்கள் 50 முதல் 100 ரூபாய்க்கும், சமோசா 50 முதல் 80 ரூபாய்க்கும், சாம்பார் மற்றும் தயிர் சாதம் 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கவும், அடுத்த வாரம் சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளின் போது கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ, சென்னை காவல் ஆணையர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் ஆகியோரிடம் மார்ச் 23ல் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது சட்டவிரோதமானது என கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தரப்பு வழக்கறிஞர், மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் இலவச குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் , பிளாஸ்டிக் பாட்டில்களில் உணவு பொருட்கள் வழங்கினால் மைதானத்திற்குள் வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ப்ளாஸ்டிக்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து மனு குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் பிசிசிஐ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க: சென்னை மெட்ரோ இரயில் நிலையத்தில்.....கூடுதலாக 2 நகரும் படிகட்டுகள்!!!
புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதல் நகரும் படிகட்டுகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,45,000 பயணிகள் பயணம் செய்கின்றனர். அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக நிறுவப்பட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புரட்சித்தலைவா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும் படிகட்டுகள் பொதுதளத்திலிருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்றுவர இன்று திறக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை இனிவரும் காலங்களில் ஒரு சில மெட்ரோ இரயில் நிலையங்களில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வசதிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), இன்று (31.03.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்). கூடுதல் பொது மேலாளர் எஸ் சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), உயர் அலுவலர்கள் மற்றும் உடன் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: விரிவான விசாரணை அறிக்கை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படும்...!!!
கோவை, திருப்பூர் மாநகராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் மாமன்ற சிறப்பு கூட்டம், கோவை மாநகரட்சி விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் வெற்றுக் காகித பட்ஜெட் எனக் கூறி கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிக்க : ரோகிணி தியேட்டர் விவகாரம்...கண்டனம் தெரிவித்த கமல், வெற்றி மாறன்...!
திருப்பூர் மாநகராட்சி 2023- 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதிநிலை குழு தலைவர் கோமதி மேயர் தினேஷ்குமார் பெற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தார். இந்த பட்ஜெட்டில் ஒன்றரை கோடி பற்றாக்குறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டாக மாநகராட்சி பட்ஜெட் இல்லை என குற்றம் சட்டி அதிமுக மற்றும் பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதேபோல், கரூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மேயர் கவிதா கணேசன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் சுமார் 2 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, ராகுல் எம்பி பதவியை பறித்ததை கண்டிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து கொண்டு மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
புதிய கல்வி கொள்கையில் ஏற்று கொள்ளத்தக்க விஷயங்கள் எதுவும் இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய மொடக்குறிச்சி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, தேசிய கல்வி கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் நவோதையா பள்ளிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, புதிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொள்ள முடியாது என்றார். மேலும், புதிய கல்வி கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால், மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : ரோகிணி தியேட்டர் விவகாரம்...கண்டனம் தெரிவித்த கமல், வெற்றி மாறன்...!
இதேபோல், பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, 26 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதில், வரும் கல்வி ஆண்டில் சுமார் 150 கோடியில் 7 ஆயிரத்து 500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என அவர் அறிவித்தார்.
மேலும், 6 முதல் 8 வகுப்பு வரையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டுள்ள நடுநிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என குறைந்த பட்சம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த நிதியாண்டில் மட்டும் 40 ஆயிரத்து 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.