கொரோனா தடுப்பூசி முகாம்... சிவகங்கையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆய்வு...

சிவகங்கை மாவட்டத்தில் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுற்றுபயணம்

கொரோனா தடுப்பூசி முகாம்... சிவகங்கையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆய்வு...
சிவகங்கை மாவட்டத்தில் அரசு முறை நிகழ்ச்சியாக நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல் முறையாக சுற்று பயணம் மேற்கொள்கிறார். இவர்களுடன்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, தேசிய சுகாதார இயக்கம், இயக்குனர், தாரேஷ் அகமது, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
 
முதல் நிகழ்ச்சியாக சிவகங்கை அருகே உள்ள  பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மருத்துவர்கள், மற்றும் செவிலியர்களிடம்  விவரங்களை கேட்டறிந்தார். கர்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டு கொள்வதை பார்வையிட்டு வருகிறார்.
 
இதனைத்தொடர்ந்து சிவகங்கை, காஞ்சிரங்கால் ஊராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கான நோய் தொற்று தடுப்பிற்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். அமைச்சர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறார்.
 
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது சுகாதாரத் துறை அதிகாரி களுடன் கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.