ஜனவரி 18 ஆம் தேதி பொது விடுமுறையா?...விளக்கமளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!

ஜனவரி 18 ஆம் தேதி பொது விடுமுறையா?...விளக்கமளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 18-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்தி பரவிய நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

பொங்கல் விடுமுறை :

தைத்திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். அதன்படி, இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை வழங்கி, வரும் 18 ஆம் தேதி மீண்டும் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இதையும் படிக்க : திருவள்ளுவர் தினம் : மரியாதை செலுத்திய முதலமைச்சர்... 9 பேருக்கு விருதுகள் வழங்கினார்...!

மீண்டும் ஒருநாள் விடுமுறை :

இந்நிலையில் சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் 4 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோாிக்கை விடுத்திருந்ததால், அதனை கருத்தில் கொண்டு ஜனவரி 18-ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

விளக்கமளித்த அமைச்சர் :

இந்நிலையில் வரும் 18ஆம் தேதி பொது விடுமுறை என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில், தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.