2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது....!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை பாலியில் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர்.

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது....!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கவேல் 53 வயதான இவருக்கு அதேபகுதியை சேர்ந்த 2 சிறுமிகளுடம் தனியாக வாழ்ந்து வந்த பெண்ணுக்கும் கள்ளதொடர்பு இருந்துவந்துள்ளது.   

இதற்கிடையில் தனது தாயும், தங்கவேலுவும் உல்லாசமாக இருந்ததை, சிறுமிகள் இருவரும் வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவுசெய்துள்ளளனர். இதனை அறிந்த மாவட்ட குழந்தைகள்  நலஅலுவலர் சவுடேஸ்வரி இது தொடர்பாக நேரில் சென்று விசாரித்தார்.

அதில்  தங்கவேலு  2 சிறுமிகளையும்  பாலியியல் ரீதியாக தொந்தரவு செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக உடனே ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரையடுத்து தங்கவேலுவை போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர்.