தாராபுரத்தில் மெகா கொரோனா  தடுப்பூசி முகாம்... அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்...

தாராபுரத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்.

தாராபுரத்தில் மெகா கொரோனா  தடுப்பூசி முகாம்... அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் ஆணைக்கிணங்க  12.9.2021 இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த், மோகன் மற்றும் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அவர்கள்  மத்திய பேருந்து நிலையம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமினை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்து தடுப்பூசியினை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன. உடன் தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் இ.ஆ.ப., தாராபுரம் வட்டாட்சியர் திருமதி ஷைலஜா, நகராட்சி ஆணையர் சங்கர், மற்றும் நகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் லக்ஷ்மி நாராயணன், துப்புரவு ஆய்வாளர்கள் தர்மராஜ் அருண் சங்கர் செல்வகுமார் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வத்தோடு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.