மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதி!  

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், வரும் 16ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதி!   

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், வரும் 16ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மருத்துவ நிபுணர்களுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலும் பிள்ளைகளுக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், வரும் 16ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.