மனிதக்கழிவை இயந்திரம் கொண்டு அகற்றும் முறை,.. தமிழகத்தில் அறிமுகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் .! 

மனிதக்கழிவை இயந்திரம் கொண்டு அகற்றும் முறை,.. தமிழகத்தில் அறிமுகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் .! 

மனிதக்கழிவை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி அறிமுகப்படுத்தியுள்ளார்.  

மனிதக்கழிவுகளை இயந்திரத்தை கொண்டு அகற்றும் முறை, முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல். ஏ உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, தனது முன்னெடுப்பில், எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொய்யாத்தோப்பு பகுதியில் இந்த எந்திர செயல்பாட்டை துவக்கி வைத்தோம்" என  உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.