சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை...

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில், காவல் துறையினரின் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை...

சுதந்திர தினத்தையொட்டி,  சென்னையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில், முதலமைச்சர் வருவதுபோலவும், அவருக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை பார்க்கப்பட்டு, பின்னர் தேசிய கீதம் இசைக்க கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக காவல்துறையினரின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி உள்பட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அணிவகுப்பு ஒத்திகை காரணமாக சென்னை மெரினா காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை, கொடி மரச்சாலையில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.