உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட ஆண் : வீடியோ வெளியாகி பரபரப்பு...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோர பள்ளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரோடு  தீயில் எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட ஆண் : வீடியோ வெளியாகி பரபரப்பு...

காரணம்பேட்டை சோமனூர் சாலை கோடாங்கிபாளையம் செல்லும் வழியில் சாலையோர பள்ளத்தில் இன்று மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் உயிரோடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் உடல் முழுக்க தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடந்த அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நேற்று மாலை ஒரு பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் ஒரு நபரை அழைத்து வந்து மதுபோதையில் தாக்கியதாகவும், பின்னர் உயிரோடு எரித்துவிட்டு தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொலைக்கான காரணம் குறித்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.