நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தாலும், கொங்குமண்டலத்தை பொறுத்தவரை திமுக பயங்கர வீக்காக இருக்கிறது. கொங்குமண்டலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களிலுள்ள 50 தொகுதிகளில் 33 தொகுதிகளில் அதிமுக தான் ஜெயித்தது திமுகவெறும் 17 தொகுதிகளில்தான் ஜெயித்தது. அதிலும் சேலத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளிலும், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் பத்துக்குப் பத்தும் அடித்து தூக்கியது அதிமுக. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் இந்த மெகா வெற்றிக்கான காரணம் கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பொறுப்பு அமைச்சராக இருந்த வேலுமணிதான்.