விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு…!  

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அனுபவம் உள்ள, அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி ஆணையிட்டுள்ளார்.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு…!   

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அனுபவம் உள்ள, அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி ஆணையிட்டுள்ளார்.

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளைக்குள் நியமனம் செய்து விவரத்தை அனுப்ப 9 மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியாகிறது. ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கவும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று தனித்தனியாக அலுவலர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.