'கேக்' சாப்பிட்ட சிறுமி பலி...கேக்கால் தொடரும் உயிரிழப்பு!

'கேக்' சாப்பிட்ட சிறுமி பலி...கேக்கால் தொடரும் உயிரிழப்பு!

காரைக்காலில் 'எலி மருந்து கேக்' சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எலி மருந்தை சாப்பிட்ட பள்ளி மாணவி:

காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு ஸ்டெல்லா மேரி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். அவரது மூத்த மகள் சலேத் நிதிக்க்ஷனா 7ஆம் வகுப்பு படித்து வந்தார். தசை சுருக்க நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி, கேக் என நினைத்து, எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து, காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிக்க: ஒரு பக்கம் ரெய்டு...மறுபக்கம் ஆதரவாளர்கள் அதிரடி கைது...அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

காரைக்காலில் மீண்டும் சோகம்:

கடந்த வாரம் எலி மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவன் பால மணிகண்டன் உயிரிழந்த சம்பவத்தில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் எலி மருந்து சம்பந்தமான விஷ மருந்துகளுக்கு தடை விதிக்க மாநில சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. இந்நிலையில், நோய் வாய்ப்பட்ட சிறுமி ஒருவர் தவறுதலாக எலி மருந்து கேக் சாப்பிட்டு உயிரிழந்துள்ள சம்பவம், காரைக்காலில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.