ராஜீவ் காந்தி சிலை அமைக்க கடிதம்.... விளக்கமளித்த திமுக....!!!

ராஜீவ் காந்தி சிலை அமைக்க கடிதம்.... விளக்கமளித்த திமுக....!!!

ராஜீவ் காந்தி மீது எப்போதும் திமுக அரசு மரியாதை வைத்துள்ளதாக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, வேளச்சேரி தொகுதியில் ராஜீவ் காந்தி சிலை அமைக்க கடிதம் கொடுத்ததாகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் , ஹசன் மெளலானா கொடுத்த கடிதம் செய்தித்துறையின் பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.  மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சென்னை மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான பழைய மகாபலிபுரம் சாலைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைத்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், ராஜீவ் காந்தி மீது திமுக அரசு எப்போதும் மரியாதை வைத்துள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிக்க:   டாஸ்மாக் ஊழியர்கள் வெல்ல நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்....சீமான் உறுதி!!