ஆட்சியர்கள் மாநாட்டின் கடைசி நாள்.. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது

ஆட்சியர்கள் மாநாட்டின் இன்றைய கடைசி நாளில், தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

ஆட்சியர்கள் மாநாட்டின் கடைசி நாள்.. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு துவங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமல்லாது, காவல்துறை கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல், அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து அறிந்துக் கொள்ளவும், அவற்றை  மேலும் சிறப்பாக செயல்படுத்தவும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடு மற்றும் அவற்றை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மூன்று நாள் ஆட்சியர்கள் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. அப்போது, சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.