இணக்கமான கட்சிகளை சந்தித்து வரும் ஓபிஎஸ்...விரைவில் வேட்பாளர் அறிவிப்பு!

இணக்கமான கட்சிகளை சந்தித்து வரும் ஓபிஎஸ்...விரைவில் வேட்பாளர் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு எங்களோடு இணக்கமாக உள்ள கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறோம் என ஓ.பி.எஸ். தெரிவித்தார். 

தனியரசு பேட்டி :

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் மொழிப்போர், தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு ஓ.பி.எஸ். மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு சென்னை பசுமை வழிசாலையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வருகை தந்து, அவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, அ.தி.மு.க.வின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் ஓ.பி.எஸ்.-ஐ நிராகரித்துவிட்டு, தனியாக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்க மாட்டார்கள் என்றும், அவரின்  எதேச்சி அதிகார போக்கை தேர்தலை மூலமாக மக்கள் எதிர்ப்பார்கள் என்றும், கட்டாயம் எடப்பாடியை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் கூறினார். 

விரைவில் வேட்பு மனு:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ். ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பாக எங்களுடன் இணக்கமாக உள்ள தோழமைக் கட்சிகளை சந்தித்து வருகிறோம், அவர்களும் எங்களை சந்தித்து வருகின்றனர் என்று கூறினார். மேலும், விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்வோம் என்றும் அவர் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com